ஜோக்குகள் !!
(வயது வந்தவர்களுக்கு மட்டும்)
இரண்டு தோழிகள். பெயர் வசந்தா
மற்றும் அஜந்தா. இருவரும் உயிர்த்
தோழிகள். முதல்வகுப்பு முதல்
ஒன்றாகவே சேர்ந்து படித்தவர்கள்.
இதில் வசந்தா எட்டாம்வகுப்புடன்
படிப்பை நிறுத்தி விட்டாள், வறுமை
காரணமாக. இவளுக்கு திருமணம்
நடந்து முடிந்து விட்டது. கணவன்
பெயர் கந்தன். வசந்தாவிற்கு
ஆங்கில ஞானம் என்பது சுத்தமாக
கிடையவே கிடையாது. ஆனால்
அஜந்தா பெரிய பணக்காராரின் ஒரே
மகள். இவள் பொறியியல் பட்டதாரி.
இவள் கணவன் பெயர் சந்தோஷ்.
வெளிநாட்டினில் M.B.A., படித்து
முடித்து விட்டு மும்பை நகரில்
உள்ள ஒரு வெளி நாட்டுத் தகவல்
தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றினில்
( I.T.) CALL CENTERல் வேலை பார்த்து
வருகிறான். அஜந்தா தனது சொந்த
ஊரான நாட்டரசன் கோட்டையில்
மாசி மாத திருவிழாவிற்கு வந்து
சேர்ந்தாள். அப்போது தோழியர்
இருவரும் ஆற்றங்கரையில்
சந்தித்துப் பேசுகின்றனர். இனிமேல்
வருவது நேரலை. ( LIVE TELECAST )
வசந்தா :- ஏய் !! அஜந்தா என்
கண்ணு எப்படி வந்தாய் ? உனக்குக்
கலியாணம் முடிஞ்சுருச்சா? உன்
மாப்பிள்ளை என்ன வேலைடி
பார்க்கிறார் ?
அஜந்தா :- என் HUB ( வீட்டுக்காரரை
Husband என்பதை சுருக்கிசெல்லமாக
அழைப்பதுதான் இந்தக்கால
நடைமுறை.) ஆஸ்திரேலியாவில்
M.B.A. படிச்சு முடிச்சுட்டு மும்பை
நகரில் கால்-சென்டரில் வேலை
பார்க்கிறார்.
(என்று சொல்கிறாள். ஆனால்
வசந்தாவிற்கு ஆங்கில அறிவு
இல்லை என்பதால் அந்த
அர்த்தத்தை வேறுமாதிரியாகபுரிந்து
கொள்கிறாள். இரண்டு கால்களுக்கு
நடுவில் என்று பொருள் புரிந்து
கொள்கிறாள் )
வசந்தா :- இதுக்கு ஏண்டி அம்புட்டு
படிப்பு படிக்கணும் ? என் புருசன்
எட்டாம் கிளாஸ் வரைக்கும்
படிச்சுட்டு கால் சென்டரில் தானே
தினமும் வேலை செய்கிறார் ?
(என்று அசட்டுத்தனமாக கேள்வி
கேட்கிறாள்)
(இது எப்படி இருக்கு ? )
நன்றி !! வணக்கம் !!
அன்புடன் மதுரை T.R. பாலு.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக